சீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டியத்திற்கு விஜய் சென்றார்.
சீரடி சாய்பாபா கோவிலில் தவெக தலைவர் விஜய் தரிசனம்
Published on

தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட விஜய், தற்போது ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த விஜய், இன்று மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மராட்டிய மாநிலம் சென்ற விஜய் அங்கு இருந்து கோவிலுக்கு கார் மூலமாக சென்றார். விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் போலீசார் பாதுகாப்புடன் அவரை அழைத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com