சோபியான் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சோபியான் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோபியான் என்கவுண்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

காஷ்மீரின் சோபியான் பகுதியில் உள்ள சாய்னாபோராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் காணப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இருதரப்பு இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அங்கு பயங்கரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com