இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு

ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த விமானங்கள் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக் கொண்டன.
இரு விமானங்கள் உரசி விபத்து.. மும்பையில் பரபரப்பு
Published on

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், ஐதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானமும் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது ஒன்றுடன் ஒன்று லேசாக மோதியது. இதில் விமானங்களின் இறக்கைகள் சேதம் அடைந்துள்ளது.

ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது, ஐதராபாத்தில் இருந்து தரையிறங்கி ஓடுபாதையில் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் இறக்கையுடன் உரசியது. இதனால் இரு விமானத்திலும் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து விமானங்களிலும் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

மும்பை விமான நிலையத்தில் இன்று இரண்டு விமானங்கள் உரசிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com