மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி

வெடி விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்
மருந்து தயாரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 2 பேர் பலி
Published on

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் சேஹா பகுதியில் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பாயிலர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் , போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், வெடி விபத்தால் ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com