

புதுடெல்லி,
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும், முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், அரியானா, மராட்டியம், மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார்.