

புதுடெல்லி,
பீகாரில் பெய்துவரும் கனமழை குறித்து மத்திய மந்திரி அஸ்வினி சவுபே கூறியதாவது:-
பீகாரில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழைக்கு குறிப்பிட்ட நட்சத்திரம் தான் காரணம். இந்த நேரத்தில் சில சமயம் மிகவும் அதிகமான மழை பெய்யும். இந்த மழை இப்போது இயற்கை பேரிடராக மாறியுள்ளது. மாநில அரசும், முதல்-மந்திரியும் அவரது குழுவினரும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.