

புதுடெல்லி,
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதே ஆண்டில் பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்தியா வான்தாக்குதல் நடத்தியது. புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை அளிக்கும் நோக்கில் இந்தியா, பாலகோட்டில் வான்வழி தாக்குதலை நிகழ்த்தியது.
இந்த நிலையில் இன்று பாலகோட் தாக்குதலை நினைவு கூறும் வகையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பாலகோட் தாக்குதலை முறியடித்த இந்திய விமானப்படை வீரர்களின் செயல் போற்றத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலகோட் தாக்குதலின் வெற்றி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பலத்தை நிரூபித்துள்ளது என்று தெரிவித்துள்ள அவர், நமது நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை நினைத்து பெருமை கொள்வதாக கூறியுள்ளார்.