

கான்பூர்,
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் பேகன்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹிமன்பூர் பகுதியில் இன்று காலை 6.24 மணியளவில் வீட்டு மேற்கூரை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இதில் ஒரு பெண் அவரது மகன் மற்றும் மகள் என ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என காவல் துணை ஆணையாளர் அனூப் சிங் கூறியுள்ளார். இதுபற்றி அறிந்ததும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.