உத்தரபிரதேச நாக்பூர் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது

உத்தரபிரதேச நாக்பூர் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் 4 வருடங்களாக பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி ராணூவ உதவியுடன் கைது செய்யபட்டான்.
உத்தரபிரதேச நாக்பூர் பிரமோஸ் ஏவுகணை பிரிவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது
Published on

நாக்பூர்

ராணுவ உளவுத்துறையின் ஒத்துழைப்புடன் உத்தரபிரதேச நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை பிரிவில் பணிபுரிந்த ஒரு ஐஎஸ்ஐ உளவாளியை கண்டறிந்து கைது செய்து உள்ளனர். பாகிஸ்தானுக்கு தேசிய முக்கியத்துவம் பற்றிய முக்கிய தகவல் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் நிஷாந்த் அகர்வால். தற்போது அகர்வாலை உத்தரபிரதேச ஏடிஎஸ் காவலில் எடுத்துவிசாரணை நடத்தி வருகிறது.பாகிஸ்தானில் தனது மேல் உள்ளவர்களுக்கு நடுத்தர அளவிலான சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றிய தகவலை அவர் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

பிரம்மோஸ், உலகில் வேகமாக செல்லும் குரூஸ் ஏவுகண. இதனை நீர்மூழ்கிக் கப்பல், விமானம் அல்லது நிலத்திலிருந்து ஏவலாம் .ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டை கைது செய்ததற்கும் உள்ளூர் போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக பிரம்மோஸ் பிரிவில்அகர்வால் பணியாற்றி வந்துள்ளார் வேலை செய்து வருகிறார். அதிகாரபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்ஏ இணையதளம் வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com