டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஒட்டலில் இன்று காலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 26 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தீ விபத்தில் சிக்கி 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com