

ஸ்ரீநகர்,
காஷ்மீரில் பயங்கரவாதிகளை கண்காணிக்க அதிக திறன் கொண்ட ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகரில் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள் கொண்ட நவீன ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி,வான்வழி கண்காணிப்பு நடந்து வருகிறது.
இதன்மூலம்,பொதுமக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநகர் போலீசார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.