உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
Published on

தூங்க சென்றனர்

உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஆனந்த் நகர் ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் சந்திரா (வயது 40). இவருக்கு திருமணமாகி தேவி (35) என்ற மனைவியும், ஹர்சித் (13), அன்ஸ் (5) என 2 மகன்களும், ஹர்சிதா என்ற 10 வயது மகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு உணவை முடித்துவிட்டு தூங்க சென்றனர்.

இடிந்து விழுந்தது

அதிகாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டின் மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 பேரும் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே காலை 8 மணியளவில் அங்கு வந்த துப்புரவு பணியாளர்கள் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். .

5 பேர் பலி

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினருடன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.அவர்கள் இடிபாடுகளை அகற்றி அதன் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். எனினும் சதீஷ் சந்திரா, அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரையும் பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதையடுத்து அவர்களது உடலை போலீசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com