உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி

உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதியதில் 25 பசு மாடுகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானது.
உத்தரபிரதேசத்தில் ரெயில் மோதி 25 பசுக்கள் பலி
Published on

பந்தா,

உத்தரபிரதேச மாநிலம் கமீர்பூர் மாவட்டத்தில் ரகோல் ரெயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த பசு மாடுகள் மீது அந்த வழியாக வந்த ரெயில் ஒன்று வேகமாக மோதியது. இதில் 25 பசு மாடுகள் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானது.

போலீசார் நடத்திய விசாரணையில், சில மர்ம நபர்கள் திட்டமிட்டு தண்டவாளத்தில் மாடுகளை நிறுத்தி விட்டு சென்றதாக தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com