சட்டப் பேரவைத் தேர்தல்: உத்தரகாண்ட் 62%, கோவா 78% வாக்குகள் பதிவு

உத்தரகண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தல்: உத்தரகாண்ட் 62%, கோவா 78% வாக்குகள் பதிவு
Published on

புதுடெல்லி,

70- தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், 403 -தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உத்தரகண்டில் 62.5 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோன்று கோவாவில் 78.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com