4 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி - சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி

4 நாடுகளுக்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
4 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி - சீரம் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
Published on

புதுடெல்லி,

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக ஐ.நா. ஆதரவுடன் கோவேக்ஸ் என்ற சர்வதேச தடுப்பூசி திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்தின்படி கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நாடுகள், குறைவான தடுப்பூசி செலுத்திய நாடுகள் ஆகியவற்றிற்கு பிற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதன்படி நேபாளம், தஜிகிஸ்தான், மொசாம்பிக், வங்காளதேசம் ஆகிய 4 நாடுகளுக்கு மொத்தம் 50 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய புனேவை சேர்ந்த சீரம் நிறுவனத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஏற்றுமதி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com