

ஸ்ரீநகர்,
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோயிலுக்கான யாத்திரைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் திரிகூட மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கான புனித யாத்திரைக்கு கடந்த மாச் 18-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது
.இதுகுறித்து அந்தக் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் குமா கூறுகையில்,:வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரைக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. முதல் வாரத்தில் ஒவ்வாரு நாளும் அதிகபட்சம் 2,000 பே மட்டுமே யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா. அதில், வெளி மாநிலத்தைச் சேந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். ஒரு வாரத்துக்குப் பின்னா நிலைமை ஆய்வு செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.