துணை ஜனாதிபதி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்


துணை ஜனாதிபதி தேர்தல்: உத்தவ் தாக்கரேயிடம் ராஜ்நாத் சிங் ஆதரவு கோரினார்
x
தினத்தந்தி 22 Aug 2025 3:15 AM IST (Updated: 22 Aug 2025 3:15 AM IST)
t-max-icont-min-icon

துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்

மும்பை,

நாட்டின் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் ஆந்திராவை சேர்ந்தவரும், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதியுமான பி.சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டு உள்ளார். இந்தநிலையில் உத்தவ் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் பேசியதாவது:-

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை தொடர்பு கொண்டு அவர்களது வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரினர். இதேபோன்று அவர்கள் மற்றவர்களிடம் ஆதரவு கேட்டு இருப்பார்கள். இது அவர்களின் பணியாகும்” என்றார்.

1 More update

Next Story