விஜய்மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: 2 வாரங்களுக்கு தள்ளி வைப்பு..!

விஜய்மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கினை, 2 வாரங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தள்ளி வைத்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திரும்பச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை தனது பிள்ளைகளுக்கு அவர் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, தண்டனை தொடர்பாக அந்த நபரின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஆனால், பலமுறை வாய்ப்பளித்தும் அவர் இதுவரை ஆஜராகவில்லை என தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டின் நிலைப்பாடு கடந்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் தெளிவாக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவுப்படி நடந்து கொள்ள குற்றவாளிக்கு 2 வார அவகாசம் தரப்படுகிறது. இந்த அவகாசத்தை கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளை குற்றவாளி பயன்படுத்தி கொள்ள தவறினால், தண்டனை விவரங்களை கோர்ட்டே அறிவிக்கும் என உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com