டெல்லி விதிமீறலில் ஈடுபட்ட பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநரால் பரபரப்பு

டெல்லியில் விதிமீறலில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி விதிமீறலில் ஈடுபட்ட பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநரால் பரபரப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் ஜி-20 உச்சி மாநாடு நேற்றும், இன்றும் என 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்து கொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக, தாஜ் ஓட்டலுக்குள் நுழைந்துள்ளது.

அந்த ஓட்டலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹியான் தங்கியிருந்துள்ளார். அந்த காரில் பல்வேறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. உஷாரான பாதுகாப்பு அதிகாரிகள் கார் ஓட்டுநரை பிடித்து, விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது, கார் ஓட்டுநர் அவர்களிடம், பைடன் தங்கியுள்ள ஐ.டி.சி. மவுரியாவுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

எனினும், தாஜ் ஓட்டலில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் இருந்து ஏற்றி சென்ற தொழில் அதிபரை திருப்பி கொண்டு வந்து விடவேண்டி இருந்தது. அதற்காக தாஜ் ஓட்டலுக்கு வந்தேன் என கூறியுள்ளார். நிகழ்ச்சி நிரல் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அவரை விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் விடுவித்தனர்.

2 நாள் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க கடந்த வெள்ளி கிழமை வந்த பைடன், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், இன்று காலை ராஜ்காட் பகுதியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி விட்டு வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com