ஜனாதிபதி மாளிகையில் 21 முதல் 29-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து


ஜனாதிபதி மாளிகையில் 21 முதல் 29-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து
x

குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகையில் சர்க்யூட்-1 என்ற பாதையில் சென்று, பிரதான கட்டிடத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க முடியும்.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு கர்தவ்யா பாதையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. தொடர்ந்து 29-ந்தேதி, குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்திய ராணுவத்தின் பின்வாங்கு முரசறை நிகழ்ச்சி நடைபெறும்.

இதனையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 21-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஜனாதிபதி மாளிகையில் பார்வையாளர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 More update

Next Story