ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்சல் பயங்கரவாதி கைது

ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நக்சல் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்சல் பயங்கரவாதி கைது
Published on

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ஜட்ரா மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். புட்ஸ்கியா பகுதியில் நடத்திய வாகன சோதனையின்போது ஒரு காரில் 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர், முக்கிய நக்சல் பயங்கரவாதி என்று தெரியவந்தது.

அவரது தலைக்கு மாநில அரசு ரூ.15 லட்சமும், தேசிய புலனாய்வு அமைப்பு ரூ.3 லட்சமும் பரிசு அறிவித்து தேடி வந்தனர். அவர் மீது 75-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. மாவோயிஸ்டு பயங்கரவாத அமைப்புடன் இணைந்து தனி அமைப்பு நடத்தி கமாண்டராக செயல்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com