

பெங்களூரு,
எம்.எல்.ஏக்களுக்கு குறைந்தது 5 ஐபிஎல் டிக்கெட்டுகளை கர்நாடக கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என கர்நாடகா எம்.எல்.ஏ விஜயானந்த் காஷபனவர் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், “எம்.எல்.ஏக்களால் பொதுமக்களைப் போல வரிசையில் நின்று டிக்கெட் வாங்க முடியாது. நாங்கள் விஐபிக்கள் என்பதால் தனி இருக்கைகள் வழங்கப்பட வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார். அதோடு, “அரசாங்கத்திடமிருந்து பல வசதிகளை பெறும் கிரிக்கெட் வாரியம், எம்.எல்.ஏக்களை உரிய முறையில் மதிக்கவில்லை,” என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளது.