சொந்த நலனுக்காக வக்பு சட்டங்களை மாற்றிய காங்கிரஸ் - பிரதமர் மோடி சாடல்

திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும். என்று பிரதமர் மோடி கூறினார்.
சொந்த நலனுக்காக வக்பு சட்டங்களை மாற்றிய காங்கிரஸ் - பிரதமர் மோடி சாடல்
Published on

பாட்னா,

அரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

திருத்தப்பட்ட வக்பு சட்டம் பழங்குடி, பட்டியலினத்தவர் நிலங்களை பாதுகாக்கும். காங்கிரஸ் அதிகாரத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது. காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்பு விதிகளை மாற்றியது. வக்பு பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன. வக்பு பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டர் நிலங்கள் நாடு முழுவதும் உள்ள நிலையில் அதை தேவைப்படுபவர்களுக்கு வழங்கியிருந்தால், இந்நேரம் பலருக்கும் பயனளித்திருக்கும். இந்த திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் இதை எதிர்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியின் நாட்களை நாம் மறந்துவிடக் கூடாது - 2014 க்கு முன்பு, காங்கிரஸ் அரசு இருந்தபோது, நாடு முழுவதும் மின்வெட்டை எதிர்கொண்ட நாட்களைக் கண்டிருக்கிறோம். இன்று காங்கிரஸ் அரசு இருந்திருந்தால், நாம் இன்னும் மின்வெட்டை எதிர்கொண்டிருப்போம்.

எங்களைப் பொறுத்தவரை, அரசியல் என்பது அதிகாரத்திற்கான ஒரு ஊடகம் அல்ல, சேவைக்கான ஒரு ஊடகம், அதனால்தான் பாஜக சொன்னது போல் செய்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் என்ன நடக்கிறது? கர்நாடகாவில், எல்லாமே விலை உயர்ந்து வருகிறது. முதல்வருக்கு நெருக்கமானவர்கள் கூட காங்கிரஸ் கர்நாடகாவை ஊழலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று கூறுகிறார்கள். தெலுங்கானாவில், காங்கிரஸ் காடுகளில் அழிக்க புல்டோசர்களை அள்ளி வீசுகிறது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com