

லக்னோ,
உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் லக்னோவில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். உத்தரபிரதேச முஸ்லிம்களின் வெற்றிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். உ.பி.யில் புதிய அத்தியாயம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.