உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் - அசாதுதீன் ஒவைசி

உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.
உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் - அசாதுதீன் ஒவைசி
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் லக்னோவில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உ.பி. தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். உத்தரபிரதேசத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம். உத்தரபிரதேச முஸ்லிம்களின் வெற்றிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும். உ.பி.யில் புதிய அத்தியாயம் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com