மேற்கு வங்காள கவர்னர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம்

மேற்கு வங்காள கவர்னர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
மேற்கு வங்காள கவர்னர் டெல்லியில் 2 நாள் சுற்றுப்பயணம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கடந்த மார்ச்-ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் வன்முறை ஏற்பட்டது. இதுபற்றி மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார் பேசி பரபரப்பு ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், கவர்னர் தங்கார் டெல்லியில் 2 நாள் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசுகிறார்.

கடந்த காலங்களில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கார், மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை பற்றி மத்திய மந்திரி அமித் ஷாவிடம் அறிக்கைகளை வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com