மனைவி அரசு வேலையில் சேருவதை தடுக்க கையை வெட்டி ஒளித்து வைத்த கணவன்

பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்த நிலையில், அவரை வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறி வந்துள்ளார் அவரது கணவர்.
மனைவி அரசு வேலையில் சேருவதை தடுக்க கையை வெட்டி ஒளித்து வைத்த கணவன்
Published on

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷரீபுல். இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரேணுவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு ஆர்டர் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். அரசு வேலை கிடைக்கும் செய்தி கணவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என எதிர்பார்த்தால், நடந்தது என்னவோ அதற்கு எதிர்மாறான சம்பவம்.

ஷரீபுல் அவரை அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வேன் என உறுதியாக இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ஷரீபுல் அவர் உறங்கியது நண்பர்களுடன் சேர்ந்து தலியணையால் அமுக்கி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை வெட்டியுள்ளார். துண்டாகிய கையை இணைத்து ஆபரேஷன் செய்துவிடுவார்களோ எனக் கருதி துண்டான கையை ஒளித்து வைத்து விட்டார்.

ரேணுகா கதுன் அண்டை வீட்டார் மற்றும் அவரது சகோதரரால் துண்டிக்கப்பட்ட மணிக்கட்டுடன் அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.அங்கிருந்து அவர் பர்த்வானில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். உடனே மருத்துவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ரேணுகாவின் தந்தை ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரது கணவர், ஷரிபுல், அவரது பெற்றோர் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் தேடத் தொடங்கியுள்ளனர், அவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.

மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வதை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com