காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்முதல்-மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்- பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தி இருந்தார்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்முதல்-மந்திரி பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வேன்- பரமேஸ்வர் பரபரப்பு பேட்டி
Published on

பெங்களூரு, 

பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆலோசனை நடத்தி இருந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி. பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறி உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். நாளை (இன்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் வெளியான பின்பு, அதுபற்றி எங்கள் தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள். துமகூரு மாவட்டத்திலும், கொரட்டகெரே தொகுதிகளிலும் காங்கிரசின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

காங்கிரசில் முதல்-மந்திரி யார்? என்பதை கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடத்தி முதல்-மந்திரி யார்? என்பது குறித்து தீர்மானிக்கப்படும். கட்சி மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி கெடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். காங்கிரஸ் மேலிடம் எனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்றுக் கொள்வேன். கட்சி தலைமை கூறி பின்பு முதல்-மந்திரி பதவி வேண்டாம் என்று சொல்ல முடியுமா?. முதல்-மந்திரி விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com