உருவபொம்மை எரித்தபோது பா.ஜனதா நிர்வாகிகள் மீது தீப்பற்றியது - 4 பேர் காயம்

உருவபொம்மை எரித்தபோது பா.ஜனதா நிர்வாகிகள் 4 பேர் மீது தீப்பற்றியதால் அவர்கள் காயமடைந்தனர்.
உருவபொம்மை எரித்தபோது பா.ஜனதா நிர்வாகிகள் மீது தீப்பற்றியது - 4 பேர் காயம்
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் 9 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றதை கண்டித்தும், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது உருவபொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக சுற்றி நின்ற நிர்வாகிகள் மீது தீப்பற்றியது. இதில் மாவட்ட பா.ஜனதா தலைவர் ராவ் பத்மா உள்பட அக்கட்சியை சேர்ந்த 4 நிர்வாகிகள் தீக்காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com