பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்?; பசவராஜ் பொம்மை கேள்வி

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்? என்று பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்?; பசவராஜ் பொம்மை கேள்வி
Published on

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பிறந்த குழந்தைகளுக்கு எல்லாம் பெயர் வைத்தது நானே என்று சித்தராமையா சொல்கிறார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயர் சூட்ட முந்தைய பா.ஜனதா அரசில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அன்றைய பா.ஜனதா அரசின் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா பெயர் சூட்டினார். அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கெம்பேகவுடா பெயரை சூட்ட 4 ஆண்டுகள் எடுத்து கொண்டது. மந்திரிசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் மத்திய அரசு மவுனமாக இருந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை மற்றும் மேல்-சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு தான் அந்த மத்திய அரசு கெம்பேகவுடா பெயரை சூட்டுவதாக அறிவித்தது. சர்வதேச விமான நிலையத்திற்கு கெம்பேகவுடா பெயரை சூட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்கியது ஏன்?.

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com