தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து ஏன் பதவி விலகக் கூடாது? ப.சிதம்பரம் கேள்வி

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்கத் தயாராக இல்லை என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம்
Published on

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பேச்சுவார்த்தைக்கு இடமில்லாத கோரிக்கையாக முன்வைத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெற்றோர்களும் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் துன்பங்களையும் காயங்களையும் தாங்கத் தயாராக உள்ளனர்; மேலும் பலரும் தயாராக இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகுமாறு கேட்கத் தயாராக இல்லை. இத்தகைய கடினமான சூழ்நிலையில், நிலைமையை சுமுகப்படுத்தும் வகையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தாமாக முன்வந்து தன்னார்வமாக பதவி விலகக் கூடாதா?" என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com