கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு

உடுப்பி அருகே, கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு
Published on

மங்களூரு;

உடுப்பி மாவட்டம் காபு தாலுகா பெலபு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா என்ற குட்டி ஷெட்டி(வயது 80). இவரது மனைவி ரேவதி ஷெட்டி(வயது 75).

வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை கிருஷணா உயிரிழந்தார். இதனைதொடர்ந்து நேற்று அவரது மகன்கள், மகள்கள் வெளியூர்களில் இருந்து வந்து தந்தை கிருஷ்ணாவின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தினர்.

கணவர் இறந்த துக்கத்தில் ரேவதி இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்துபோனார். இதனால் மகன்கள், மகள்கள் சோகத்தில் மூழ்கினர். இதைதொடர்ந்து சாவிலும் இணைபிரியாத தம்பதியின் உடல்கள் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com