மேக‌தாதுவில் சுற்றுலாப்பயணிகளை தாக்கிய காட்டு யானை

காட்டு யானை ஒரு பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.
மேக‌தாதுவில் சுற்றுலாப்பயணிகளை தாக்கிய காட்டு யானை
Published on

பெங்களூரு,

கனகபுரா அருகே உள்ள சங்கம வனப்பகுதியில், மேகதாது அருகே காவேரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காட்டு யானை ஒன்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சங்கம வனப்பகுதியில் தண்ணீர் குடிக்க ஆற்றுக்கு வந்த ஒரு காட்டு யானை, திடீரென சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியது. அப்போது, ​​சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடினர். அப்போது, ​​அந்த காட்டு யானை ஒரு பெண்ணைத் தாக்கிவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

காட்டு யானை தாக்குதலில் அப்பெண்ணுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு, அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியாக இருந்த சுற்றுலாப் பயணி மீது நடந்த இந்தத் தாக்குதல் காட்சி, உள்ளூர்வாசி ஒருவரின் கைப்பேசியில் பதிவாகியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இந்தச் சம்பவம் கோடிஹள்ளி காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com