

புதுடெல்லி,
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லிக்கு வந்து சேர்ந்தார். மந்திரி பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி இன்று அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நிலவரம், குவாட் அமைப்பை வலுப்படுத்துதல், பாதுகாப்பு, வர்த்தக உறவை பலப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. கொரானா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்களை தொடர்ந்து வினியோகிக்குமாறு அமெரிக்காவை இந்தியா வற்புறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.