

புது டெல்லி,
உலகம் முழுவதும் இன்று உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நேக்கம் பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதார கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் சபை இந்த தினத்தை அறிவித்தது.
உணவுவழி நோய்கள் ஒரு பெரும் உலகளாவிய சுமையாகத் தொடர்கின்றன; அவை உடல்நலம், வாழ்வாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரங்களைப் பாதிக்கும் குறைந்தது 200 நோய்களை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், இவற்றை பெரும்பாலும் தடுக்க முடியும்.
சுமையிலிருந்து தீர்வுகளுக்கு எங்கும் பாதுகாப்பான உணவு என்ற 2026 உலக உணவு பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள், நோய், அதன் சுமை மற்றும் இழந்த உயிர்கள் குறித்த தரவுகள், ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை நோக்கிய நடவடிக்கைகளுக்கு எவ்வாறு வழிகாட்ட முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
மத்திய அமைச்சர் ஜெபி நட்டா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
உலக உணவு பாதுகாப்பு நாளில், ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவை உறுதி செய்வதில் நமது உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவோம்.
சிக்கலிலிருந்து தீர்வு வரை எங்கும் பாதுகாப்பான உணவு என்பது இந்த ஆண்டின் மைய பொருளாகும்; இது பண்ணையிலிருந்து நமது தட்டுக்கு வரும் உணவு பொருட்கள் வரை சுகாதாரம் மற்றும் அறிவியல் பூர்வமான நடைமுறைகள் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
சிறந்த ஆரோக்கியம் மற்றும் வலிமையான தேசத்தை உருவாக்க, சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்து, சமச்சீரான உணவு முறையை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மோடி குடும்பங்களை வலியுறுத்தியுள்ளார். ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து, உடல்நலம் பேணும் மற்றும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க பங்களிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.