

புதுடெல்லி ,
இன்று (ஏப்ரல் 7) உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கட்டும். . இன்று சுகாதார துறையிலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகும்.
இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்திய அரசு அயராது உழைத்து வருகிறது. . உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் நமது தேசம் என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது.
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்