கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

கவர்னருக்கு எதிரான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை
Published on

புதுடெல்லி,

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 10-ந்தேதிக்கு தற்காலிகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் கவர்னரின் அறிவிக்கைக்கு தடை கோரிய ரிட் மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை மறுநாள் விசாரிக்கிறது. இதனிடையே பஞ்சாப் கவர்னருக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மனுவும் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com