

லக்னோ,
46 மதரஸாக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டதும் பாரதீய ஜனதா எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் 46 மதரஸாக்களின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டதும் அவைகளுக்கு வழங்க மானியங்களை யோகி ஆதித்யநாத் அரசு புதன் கிழமை நிறுத்தியது. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏப்ரல் மாதத்தில் இருந்து சலுகைகளை யோகி ஆதித்யாநாத் அரசு நிறுத்திவிட்டது. இப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 560 மதரஸாக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் இணைந்த கூட்டு குழுவானது விசாரணை செய்து நடத்திய அறிக்கையின்படியே உ.பி. மாநில அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இதனையடுத்து பாரதீய ஜனதா எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.
பாரதீய ஜனதா மற்றும் எங்களுடைய கொள்கைக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும், ஆனால் பாரதீய ஜனதா மற்றும் அதனுடைய தலைமை எந்தஒரு மதத்திற்கும் மதிப்பளிக்காது, என காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.