மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரள மாநிலம் மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Published on

மூணாறு,

கேரள மாநிலம் மூணாறில் 3-வது நாளாக ஜீரோ டிகிரி குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தலமான மூணாறில், வெப்பநிலை படிப்படியாக குறைந்து 2 நாட்களுக்கு முன்பு, ஏழுமலை, தேவிகுளம் எஸ்டேட் பகுதிகளில் ஜீரோ டிகிரியாகப் பதிவானது. இதனால் கடந்த 3 நாட்களாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதியவர்களும் சிறுவர்களும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பச்சைத் தேயிலை தோட்டங்கள் மெல்லிய பனியால் மூடப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.

மூணாறு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பகலில் 20 முதல் 25 டிகிரியாக வெப்பநிலை உள்ளது. புத்தாண்டு சீசன் முடிந்துள்ள நிலையில், மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com