குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.30,000 - சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

சுப்ரீம் கோர்ட்டு மிக வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.30,000 - சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள இல்லத்தரசிகள் வீடுகளில் தங்களின் குடும்பத்திற்காகச் செய்யும் ஊதியமில்லா வீட்டு வேலைகளின் மதிப்பு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.30,000 ஆகக் கணக்கிடப்பட்டு மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் வெறும் வீட்டைப் பராமரிப்பவர்கள் அல்ல, மாறாக நாட்டின் உன்னதமான கட்டமைப்பாளர்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு மிக வரலாற்றுச் சிறப்புமிக்கக் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.

விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் வழக்கின் விசாரணையின் போது இந்த முக்கியக் கருத்தை முன்வைத்துள்ள கோர்ட்டு, ஒரு பெண் அதிகாலை முதல் நள்ளிரவு வரை குடும்பத்திற்காகச் செய்யும் சமையல், தூய்மைப் பணி, குழந்தைகளைப் பராமரித்தல் மற்றும் முதியவர்களைக் கவனித்தல் போன்ற அசாத்தியமான உழைப்புக்கு விலைமதிப்பே கிடையாது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இல்லத்தரசிகளின் இந்த அன்றாடப் பங்களிப்பு என்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூகத்தின் ஸ்திரத்தன்மைக்கும் அடித்தளமாக விளங்குவதால், அவர்களின் உழைப்பை வெறும் தியாகம் என்ற பெயரில் சுருக்கிவிடாமல், அதற்குரிய பொருளாதார மதிப்பையும் சமூக அங்கீகாரத்தையும் வழங்க வேண்டியது அவசியமாகும் என்று மிக அழுத்தமாகத் தெரிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட்டு.

X

Daily Thanthi
www.dailythanthi.com