சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் மேலிடத்தால் திரும்ப பெறப்பட்டதா?

தந்தையின் உடல்நிலையை சுட்டிக்காட்டி அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் மேலிடத்தால் திரும்ப பெறப்பட்டதா?
Published on

சென்னை,

பா.ஜனதா சார்பில் தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் 2 தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வழங்கப்பட்டுள்ளது.

இதில் அர்விந்த் மேனன், சுதாகர் ரெட்டி, ஆகியோருக்கு அதிகபட்சமாக 7 தொகுதிகளும், மத்திய மந்திரி எல்.முருகனுக்கு 5 தொகுதிகளும், பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில், தந்தையின் உடல்நிலையை சுட்டிக்காட்டி அண்ணாமலை இந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதற்கிடையில், சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பா.ஜனதா பொறுப்பாளர்கள் பட்டியலை, கட்சியின் மேலிடம் திரும்ப பெற்றுவிட்டதாகவும், அண்ணாமலைக்கு ஒதுக்கிய 6 தொகுதிகளில் 2 தொகுதிகள் பா.ஜனதாவின் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனிடம் வழங்கப்பட்டதாகவும், அவரும் அதனை பார்க்க முடியாது என தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அப்படி எதுவும் இல்லை என பா.ஜனதா மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com