

சென்னை,
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு வருகிற 30-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.தேர்தல் நெருங்குவதால் ஆளும் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீட்டை ஏறக்குறைய முடித்துவிட்டது. ஒரு சில கட்சிகளுடன்தான் பாக்கியுள்ளது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கி உள்ளது. அதன்படி திமுக-விசிக இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விசிகவுக்கு 8 தொகுதிகளில் 6 தனி தொகுதிகளும் 2 பொது தொகுதிகளும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்மூலம் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய கட்சியாக விசிக இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை விசிக திமுகவிடம் வழங்கியுள்ளது.
அதன்விவரம் பின்வருமாறு:-
* திருப்போரூர்
* செய்யூர்
* நாகை
* புவனகிரி
* அரூர்
* காட்டுமன்னார் கோயில்
* கள்ளக்குறிச்சி
* குன்னம்
* மயிலம்
* பெரியகுளம்
* சிவகங்கை(வானூர் அல்லது திண்டிவணம் )
* கே.வி.குப்பம்
* ஸ்ரீபெரும்புதூர்
* சென்னை மாவட்டம் (ஒரு தொகுதி )
10 தனித் தொகுதிகள், 5 பொதுத் தொகுதிகள் என மொத்தம் 15 தொகுதிகள் ஆகும்.