மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி

அதிமுக ஆதரவுடன் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் அன்புமணி ராமதாஸ்.
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி
Published on

சென்னை,

தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்கா லம் வரும் ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் காலியிடங்களை நிரப்ப தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி தொடங்கியது.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். தி.மு.க. தங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். மற்றொரு இடம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து தம்பிதுரையும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், சவுமியா அன்புமணி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் உடனிருந்தனர். அதிமுக ஆதரவுடன் மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாகிறார் அன்புமணி ராமதாஸ். இந்த தேர்தலில் போட்டிக்கு வாய்ப்புகள் இல்லை என்பதால், அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com