விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

கவர்னரின் செயல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் மத்திய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் கவர்னர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், கவர்னரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது.

பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, கவர்னர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக கவர்னர் விஜய்யை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com