சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி விழா


சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி விழா
x

சட்டசபையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி தங்கள் வீட்டில் வைத்து வழிபட்டனர். இதேபோல் நகரமெங்கிலும் கோவில்கள், ஆட்டோ ஸ்டாண்டுகள், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடந்து வருகிறது.

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. மற்றும் முதல்-அமைச்சர் அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


Next Story