800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை


800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை
x

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 800 பேருக்கு ரூ.2 கோடி திருமண உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

புதுவை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலமாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள மணப்பெண்ணின் திருமண உதவித்தொகையாக ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 800 பேருக்கு வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.2 கோடி வருகிற 22-ந்தேதி முதல் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்த தொகையானது தேதி வாரியாக (சீனியாரிட்டி அடிப்படையில்) 5-9-2022 வரை விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story