மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 மழைக்கால நிவாரணம்


மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500  மழைக்கால நிவாரணம்
x

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 மழைக்கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

புதுச்சேரி

மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 மழைக்கால நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

மழைக்கால நிவாரணம்

புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.2,500 மழைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட நிவாரணமாக 17 ஆயிரத்து 983 மீனவ குடும்பங்களுக்கு ரூ.4 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் இன்று நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

வங்கி கணக்கில் செலுத்தம்

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர் தெய்வ சிகாமணி மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தொகை மீனவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story