சட்டமன்ற கூட்ட அரங்கை தயார்படுத்தும் பணி தீவிரம்


சட்டமன்ற கூட்ட அரங்கை தயார்படுத்தும் பணி தீவிரம்
x

புதுவை சட்டமன்ற கூட்டம் 20-ந் தேதி கூடுகிற நிலையில் அரங்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 31-ந்தேதி முடிவடைந்தது.

6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி வருகிற 20-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது. இதற்காக சட்டமன்ற கூட்ட அரங்கை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரங்கை தூய்மைப்படுத்துவது, ஒலி, ஒளி அமைப்புகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story