

ஆனால் பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் செல்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயத்திற்கும் குழந்தைகள் செல்போனையே சார்ந்திருக்கும் சூழல் நிலவுவதாகவும், அவர்களின் கவனமும் திசை திருப்பப்படுவதாகவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.