செல்போனுக்கு தடை

கொரோனாவின் தாக்கத்தால் ஆன்லைன் கல்வி முறை இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால் குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட்போன் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
செல்போனுக்கு தடை
Published on

ஆனால் பிரான்ஸ் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் செல்போன், டேப்லெட் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயத்திற்கும் குழந்தைகள் செல்போனையே சார்ந்திருக்கும் சூழல் நிலவுவதாகவும், அவர்களின் கவனமும் திசை திருப்பப்படுவதாகவும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com