மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) அமைப்பு டி.இ.டி. எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதுபோல மத்திய அரசும் சி.டி.இ.டி. எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகிறது.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு
Published on

டிசம்பர் 2019-க்கான சி.டி.இ.டி. தேர்வு தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது.

பள்ளிக்கல்வியில் 50 சதவீத மதிப்பெண்களுடன், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்கள் 5-ம் வகுப்புக்கு உட்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கும், பட்டப்படிப்புடன், பி.எட் படித்தவர்கள் 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுதினால் ரூ.700-ம், 2 தாள் தேர்வுகளை எழுதினால் ரூ.1200-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒரு தாள் தேர்வுக்கு ரூ.350-ம், இரு தாள்களையும் எழுதினால் ரூ.600-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 18-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்வு டிசம்பர் 8-ந் தேதி நடத்தப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரங்களை https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com