'தோசையின் தலைநகரம்' எது தெரியுமா?... பலரும் அறியாத ஆச்சரிய பதில்!

தென்னிந்தியாவின் அடையாள உணவாகக் கருதப்படும் தோசை, பல்வேறு நாடுகளிலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.
Dosa
Image credits: AI
Published on

இந்தியாவின் பாரம்பரிய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கும் தோசை, இன்று உலகம் முழுவதும் பிரபலமான உணவாக மாறியுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவின் அடையாள உணவாகக் கருதப்படும் தோசை, பல்வேறு நாடுகளிலும் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், உலகின் 'தோசைத் தலைநகரம்' என்ற பெருமையை பெற்றிருக்கும் நகரம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பலரும் தோசையின் தலைநகரம் சென்னை அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு நகரம் என்று நினைப்பார்கள். ஆனால், அந்த பெருமையை பெற்றிருப்பது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு தான்.

பெங்களூருவில் பல தசாப்தங்களாக இயங்கி வரும் பாரம்பரிய உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள், தலைமுறை தலைமுறையாக ஒரே சுவையை பாதுகாத்து வருகின்றன. குறிப்பாக, மசாலா தோசை, பெண்ணே தோசை, செட் தோசை உள்ளிட்ட பல வகை தோசைகளுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். சில பிரபல உணவகங்களில் ஒரு தோசையை சுவைப்பதற்காகவே நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது அங்கு சாதாரண நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தோசையின் சிறப்பு அதன் சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் உள்ளது. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, புளிக்கவைத்து தயாரிக்கப்படும் மாவு செரிமானத்திற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த இயற்கையான புளிப்பு செயல்முறையே தோசைக்கு தனித்துவமான மணம், மென்மை மற்றும் சுவையை வழங்குகிறது.

வரலாற்று குறிப்புகளின்படி, தோசை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் தோன்றியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்தியா முழுவதும் பரவிய இந்த உணவு, இன்று உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய உணவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. அதேசமயம், தோசை வகைகளின் பெரும் மையமாகவும், அதன் தனித்துவமான உணவக கலாச்சாரத்தாலும் பெங்களூரு 'உலகின் தோசைத் தலைநகரம்' என்ற பெயரை பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com